தெய்வத்திரு.சோ. நடராசசுந்தரத்தின் வெற்றிச் சரித்திரம்
![]() |
பிரிதிஷ்டைக்காக நாகசிலையுடன் |
இக்காலகட்டத்தில் திருபாம்புரம் கிராமம் மிகவும் வளச்சியடைந்த நிலையில் காணப்படுகிறது. அங்காடிகள் பல தொடங்கப் பெற்றுள்ளன. கிராம மக்கள் திருப்பாம்புரம் புகழ் சேடபுரீஸ்வரர் கோயில் பற்றியும், ஸ்தல வரலாற்றையும், தொன்மையையும் நன்கறிந்திருக்கின்றனர். இத்தகு நிகழ்வுக்கு
காரணமானவர் அரசியலதிகாரம் பெற்றவரோ, அரசு அதிகாரியோ செல்வந்தருமில்லாத அந்த "வெள்ளுடை வேந்தரன்றோ".
யார் அந்த “வெள்ளுடை வேந்தர்”? என்ற வினா அவரைப்பற்றி அறியாதவர்களின் மனதில் எழுவது இயல்பு மேலே குறிப்பிட்ட விழாக்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புதான் என்ன? இவற்றிற்கு இங்கு விடையளிப்பது நமது கடமையாகிறது.TSN என்று
நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அறிஞர் பெருமகன்தான் அந்த "வெள்ளுடை
வேந்தர்".அவருடைய முழுப்பெயர் திருப்பாம்பரம் சோமசுந்தரம் நடாராஜசுந்தரம் என்பதாகும்.
ஆன்மீகப் பணியில்
ஒன்பது தலைமுறைகளாகத் சைவ சமயத்திற்கு தொண்டாற்றி வந்த குடும்ப வழியில் வந்தவராதலாலும், அமிர்தகவி குப்பையா பிள்ளை திருபாம்புரம் சகோதரர்கள் என்ற புகழ் பெற்ற நடராசசுந்தரம் பிள்ளை சிவசுப்பிரமணிய பிள்ளை வழி வந்தவராதாலாலும் சிறு வயது முதலே சைவ சமய பற்று மிக்கவராக விளங்கினார்.சென்னை இராமகிருஷ்ணா பள்ளியில் கல்விப்பணியாற்ற தொடங்கியது முதல் பகவான் இராமகிருஷ்ணரிடமும் சுவாமி விவேகாந்தாரிடமும் அன்னை சாராதாம்மையிடமும் பக்தி கொண்டவரானார்.
இறைப்பணியில்
யார் அந்த “வெள்ளுடை வேந்தர்”? என்ற வினா அவரைப்பற்றி அறியாதவர்களின் மனதில் எழுவது இயல்பு மேலே குறிப்பிட்ட விழாக்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புதான் என்ன? இவற்றிற்கு இங்கு விடையளிப்பது நமது கடமையாகிறது.
ஆன்மீகப் பணியில்
ஒன்பது தலைமுறைகளாகத் சைவ சமயத்திற்கு தொண்டாற்றி வந்த குடும்ப வழியில் வந்தவராதலாலும், அமிர்தகவி குப்பையா பிள்ளை திருபாம்புரம் சகோதரர்கள் என்ற புகழ் பெற்ற நடராசசுந்தரம் பிள்ளை சிவசுப்பிரமணிய பிள்ளை வழி வந்தவராதாலாலும் சிறு வயது முதலே சைவ சமய பற்று மிக்கவராக விளங்கினார்.சென்னை இராமகிருஷ்ணா பள்ளியில் கல்விப்பணியாற்ற தொடங்கியது முதல் பகவான் இராமகிருஷ்ணரிடமும் சுவாமி விவேகாந்தாரிடமும் அன்னை சாராதாம்மையிடமும் பக்தி கொண்டவரானார்.
இறைப்பணியில்
திரு. நடராசசுந்தரம் அவர்கள் திருப்பாம்புரம் நகரில் தன்
குடும்பத்தச்சார்ந்த மூதாதையர்கள் நான்கு அல்லது ஐந்து
நூற்றாண்டுகளுக்கும் மேலாக இறை தொண்டில் ஈடுபட்டுத் தன்னலம்
கருதாது திருத்தொண்டு செய்து வ:ந்தனர் என்பதை செவிவழிச் செய்தியாக அறி:ந்தார். இதுகுறித்த கல்வெட்டும் இக்கோயிலில்
உள்ளது
தொடரும்