சேடபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்


     அருள்மிகு சேடபுரீஸ்வரர்   
ஆராய்ச்சியாளர்கள் மூல நூலான நன்னிலம் கல்வெட்டுகள் என்ற நூலினை கண்ட பிறகே தங்களுடைய ஆய்வேட்டில் குறிப்பிட வேண்டுமேயல்லாது கீழே குறிப்பிடபடுவது கோயிலின் செய்தியாக மட்டுமே கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.    

திருபாம்புரம் கோயிலில்  28 கல்வெட்டுகள் உள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இங்குள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து நன்னிலம் கல்வெட்டுகள் என்ற நூலில் சேர்த்து வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் மூன்றான் குலோத்துங்கன் காலந்தொடங்கி தஞ்சை மராத்திய மன்னர்களின் ஆட்சிகாலம் வரை வெட்டபட்டுள்ள கல்வெட்டுகளாக இவை உள்ளன. இக்கல்வெட்டுகள் வாயிலாக அக்கால மன்னர்களின் கொடையுள்ளம் ஆட்சிமுறை அமைப்பு ஆகியவற்றை குறித்து அறிய முடிகிறது.       


இராராச விநாயகப் பிள்ளையார்
       இராராச விநாயகப் பிள்ளையாரை மூன்றான் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வ:ந்த 15 வது நாளில் அரசியலதிகாரி குணவாயிலுடையார் மீனவன் மூவேந்த வேளான் எழுந்தருளிவிக்க மன்னனும் இறையிலியாக நிலங்கள் வழங்கி ஆணையும் பிறபித்துள்ளான் என்ற செய்தி கல்வெட்டாக காணப்படுகிறது. இரண்டாம் இராராஜராஜன் பெயரில் விநாயகர் அழைக்கப்பட்டுள்ளார்.


தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக