தலபுராணம்







அருள்மிகு சேடபுரீஸ்வரர்
சரித்திரச் செம்மல் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருவீழிமிழலையில் வாழ்ந்த திரு. தியாகரசதேசிகரிடமிரு:ந்து திருபாம்புரம் தலபுராணத்தை சுவடி வடிவில் பெற்று நகல் செய்து உரை எழுதி வைத்திருந்ததை சேடபுரீஸ்வரர் திருவருளால் அன்பர் நடராசசு:ந்திரத்தின் தொடர்பால் கும்பாபிஷேக விழாவில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தவிர்க முடியாத காரணங்களால் பின்னர் வெளியிடப்பட்டது.  





தலபுராணங்கள் மூன்று வகைப்படும். குறிப்பிடப்பட்ட கடவுளின் பெயராலும், குறிப்பிடப்பட்ட கடவுளின் அடியார்களின் பெயராலும், ஒரு குறிப்பிட்ட  கடவுள் குடிகொண்டுள்ள  கோயிலின் லத்தின் பெயாராலும் விளங்குகிறது.  
சரித்திரச் செம்மல் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியவாறு கீழே தரப்பட்டுள்ளது.

திருபாம்புரம் எனப்படும் உரகபுரத்தின் தலபுராணம் தியாக்ராசப்பிள்ளையார் வாழ்த்துடன் தொடங்குகிறது.
பாயிரம்
தியாகராசப் பிள்ளையார் தோத்திரம்
விருத்தம்
 காராருஞ் சோலைநெறி மேரு வெற்பில்
     கதிக்குமொரு பாரதத்தைக் கதையாற் றீட்டி
சீராரப் படைத்தானைக் குமர னுக்குச் 
    செல்வமென மூத்தானைத் திரிசூழ் பாரில்
ஆராரும் புகழவருங் கீர்த்தி யானை
     ஐந்து முகமுடையானை அமரர் போற்றும்
போராரும் பாம்புரத்தில் தியாக ராசப்


     பிள்ளையா ரிருபதத்தைப் பெற்று வாழ்வோம். 1
சிற்றம்பலப்பிள்ளையார் தோத்திரம்
                       வேறு
காரனை முகத்தனைக் கையோரைந் துடையானைக்
       கமழுங் கொன்றை
தாராரு முடியானைச் சலசலமென்றப் படியானைச்
      சகத்தோர்க் கெல்லாம்
தீராத செல்வமெல்லாம் அளிப்பானை ஒருமருப்பு
      செங்கை யானை
ஆராயும் பாம்புரசிற் றம்பலப்பிள்ளையா ரடிபதத்தை
      யகத்தில் வைப்போம்
பாம்புரநாதன் வாழ்த்து
விருத்தம் வேறு

காதமருங் குழையனை கனக வெயோன் தேவேந்திரன்
சீத மதி சேடன்முதற் பூசைகொள்ளும் செய்கையானை
மாதுவண்டு சேர்குழலி ஒருபாகம் வைத்தானை வசைப்பூவாம்
பாதமிரண்டையானைப் பாம்புர நாதனை தினமும் பணிந்து வாழ்வோம்.                                                        3

விருத்தம் வேறு
வண்டுசேர் குழலாள் வாழ்த்து
கண்டுசேர் மொழியாளைக் கருணைபொழி விழியாளைக்
கமலத் தோடு
செண்டுசேர் கரத்தாளைத் திங்கள்சேர் சிரத்தளைச்
சேடன் பூசை
பண்டுசேர் பாம்புரத்தில் சேஷபுரீசு வரன்வாம
பாகத் தாளை
வண்டுசேர் குழலாளை இருபோது மவள்பாதம்

வணங்கி வாழ்வோம்.                                                                                                                                                           4
முருகன் வணக்கம்
துள்ளுமா மயிலானைச் சுரர்பகையைத் தீர்த்தானைச்
சுரர்கள் போற்றும்
வெள்ளிமா மாலை போலும் சுடர்வேலை யுடையானை
விண்ணோர்க் கெல்லாம்
தெள்ளிதா மருவிய சேனாபதியே ஆனானைத்
வெய்வ யானை
வள்ளிநா யகனை வளராறு முகத்தனை
மனத்துள் வைப்போம்                                                                                                                                       5
தெய்வங்க நாயகன் வணக்கம்
மல்லல்முனி வோர் விடுத்த மான்மழுவைத் தரித்தானை

 வானோர்க் கெல்லாம்
 செல்வமிகக் கொடுத்தானைத் தெய்வங்க நாயகனைச்
செகத்தோர்க் கெல்லாம்
 அல்லல்விழி ஒழிப்பானை அப்பரோடு சம்பந்தர்
கருள வானை
நல்லதிருப் பாம்புரத்தில் நான்மறையா ளனைத்தொழுது
 நாளும் வாழ்வோம்.                                                                                                                                        
நடராசப் பெருமான் வாழ்த்து
முன்னைவா னவரெல்லாம் பணியுமிரு பதத்தானை
முயற்சி யில்லா

என்னையா ளுடையானைக் கங்கைவாழ் சடையானை
எவர்க்கு மேலாம்
சென்னிநா டாள்வானைச் சிதம்பரத்தில் நடம்புரியும்
செல்வன் தன்னை
புன்னைவாழ் சடையானைப் புனிதபதம் சென்னிமிசை
போற்றல் செய்வோம்.                                                                                                                                7
பாம்புரத்தில் பூசைபண்ணி பதம்பெற்றோர் பன்னிருவர்
பகரும் சேடன்
ஆம்பிரமன் தேவேந்திரன் அம்மையகத் தியன்கங்கை
அன்லோன் திங்கள்
வாம்பரிதே ரிரவிதக்கன் சுனீதன் செங்க ணான்சேஷன்
வரம்பெற் றார்கள்
தீம்பமறுமா முனிவோரே யென்றேமன மகிழ்வாய்ச்
செப்புஞ் சூதன்.
                                                                                                                                                       8
தொடரும்